தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ் மாநில காங்கிரஸ் ஊழியர் கூட்டம்

சேலம், ஜூலை 3: அயோத்தியாப்பட்டணத்தில் சேலம் புறநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட தமாகா தலைவர் வக்கீல் செல்வம் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், கிழக்கு மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், மாநில இணை செயலாளர் சின்னதுரை, புறநகர் மாவட்ட துணை தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அயோத்தியாபட்டணம் பேரூராட்சி தலைவர் தேவராஜ் வரவேற்றார். கூட்டத்தில் தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். முன்னதாக காமராஜர், மூப்பனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisement

கூட்டத்தில் வரும் 14ம் தேதி திருச்சியில் தமாகா தலைவர் வாசன் எம்பி தலைமையில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்டத்தில் இருந்து திரளாக பங்கேற்பது, 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள் விழாவை சேலம் புறநகர் மாவட்ட தமாகா சார்பில், அனைத்து வட்டார, நகர, பேரூராட்சி பகுதிகளிலும் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பள்ளி குழந்தைகளுக்கு நல உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் நல்லதம்பி, மாவட்ட செயலாளர்கள் வீராணம் கிருஷ்ணன், எல்ஐசி நாகராஜ், முனுசாமி, வாழப்பாடி நகர தலைவர் ஷாஜகான், இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் ரகு நந்தகுமார், புறநகர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் லட்சுமி காந்தன், மாணவரணி மாவட்ட தலைவர் இளங்கோ மற்றும் நிர்வாகிகள் வாசுதேவன், முருகன், சீனிவாசன், ராமு, வடிவேலு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். வட்டார தலைவர் தனபால் நன்றி கூறினார்.

Advertisement

Related News