தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாம்பரம் மாநகர காவல் எல்லையில் மேடவாக்கம் காவல் நிலையம்: ஆணையர் அபின் தினேஷ் மோதக் திறந்தார்

வேளச்சேரி: தாம்பரம் மாநகர காவல் எல்லையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மேடவாக்கம் காவல் நிலையத்தை தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் திறந்து வைத்தார். தாம்பரம் மாநகர காவல் துவங்கப்பட்டபோது 20 காவல் நிலையங்கள் இருந்தன. அதன் பிறகு 21வது காவல் நிலையமாக கிளாம்பாக்கம் காவல் நிலையம் திறக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக பள்ளிக்கரணை காவல் மாவட்டம், சேலையூர் சரகத்திற்குட்பட்ட பள்ளிகரணை காவல் நிலையத்தை பிரித்து மேடவாக்கம் காவல் நிலையம் புதிதாக துவங்கப்பட்டது. இது தாம்பரம் மாநகர காவல் எல்லையில் 22வது காவல்நிலையம்.
Advertisement

இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்டு மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம் ஆகிய மூன்று ஊராட்சிகள் உள்ளன. இது 10.27 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மொத்தம் 1,20,000 மக்கள் தொகை கொண்டது. இந்த காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றபிரிவு என தலா ஒரு இன்ஸ்பெக்டர்கள், 5 சப் இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 75 போலீசார் என மொத்தம் 82 பேர் பணி அமர்த்தபட்டுள்ளனர். மேடவாக்கம் காவல் நிலையம் கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேடவாக்கம் காவல் நிலையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் தலைமை வகித்து, ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி புதிய காவல் நிலையத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கூடுதல் ஆணையர் மகேஸ்வரி, துணை ஆணையர் கவுதம் கோயல், உதவி ஆணையர் கிறிஸ்டின் ஜெய்சில், மேடவாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா மற்றும் போலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement