தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்கள், போலீசார் பங்கேற்பு

தாம்பரம்: தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, போதைப்பொருள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தாம்பரம் பேருந்து நிலையம் அருகே, தாம்பரம் மதுவிலக்கு பிரிவு போலீசார் மற்றும் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் இணைந்து நேற்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
Advertisement

பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கி, போதைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதேபோல, குரோம்பேட்டை காவல் நிலையம் சார்பில் குரோம்பேட்டையில் உள்ள அரசினர் பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி, தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையில் நடைபெற்றது. இதில், குரோம்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராஜசேகரன் மற்றும் போலீசார் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பலூன்களை பறக்கவிட்டனர். மேலும் மாணவர்கள், போலீசாருடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றனர்.

Advertisement

Related News