தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாயில் உபரிநீர் திறப்பு

 

Advertisement

உடுமலை, ஜூலை 24: அமராவதி அணையில் இருந்து நேற்று பிரதான கால்வாயில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து, கடந்த 5 நாட்களுக்கு முன்பு மேல் மதகு வழியாக ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டது. 6வது நாளாக நேற்றும் உபரிநீர் திறந்துவிடப்பட்டது.

90 அடி உயரம் கொண்ட அணையில் நேற்று காலை நீர்மட்டம் 89.11 அடியாக இருந்தது. அணைக்கு 1,444 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 1,472 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், அமராவதி அணையின் பிரதான கால்வாயில் நேற்று மதியம் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதன்மூலம் பிரதான கால்வாய் பகுதியில் சுமார் 25,250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News