தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோடை விடுமுறை முடிந்தது பள்ளிக்கு உற்சாகத்துடன் மாணவர்கள் வருகை

திண்டுக்கல், ஜூன் 3: திண்டுக்கல் மாவட்டத்தில், கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதனை அடுத்து ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வந்தனர். திண்டுக்கல்லில், நேற்று காலை பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் புதிய சீருடைகளை அணிந்து புத்துணர்ச்சியுடன் வந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்து, பூக்களை தூவி, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். அதேபோல் முதன் முதலில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், குழந்தைக்கு புத்தாடை அணிவித்து பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

Advertisement

சில பெற்றோர் பள்ளி முன்பு நின்று தங்கள் குழந்தையுடன் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதற்கிடையே கோடை விடுமுறைக்கு பிறகு நண்பர்களை சந்தித்ததால் மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் கை கொடுத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு தேவையான சீருடை, புத்தகங்கள், புத்தகப்பை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் அவற்றை பெற்றுக்கொண்டனர்.

Advertisement

Related News