தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவட்ட மைய நூலகத்தில் சிறுவர்களுக்கான கோடை நூலக முகாம்

திருச்சி, மே 13: திருச்சி மாவட்ட நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து பள்ளி மாணவ, மாணவியருக்கு மே மாதம் 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் பயனுள்ள வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று (திங்கட்கிழமை) ‘‘அறிவியலும், வாழ்வியலும்” என்ற தலைப்பில் மேக் நாட் அறிவியல் மன்ற நிர்வாகிகள் நர்மதா மற்றும் வசந்தன் குழந்தைகளிடம் நமது அன்றாட வாழ்வில் ஒவ்வொரு செயல்களிலும் அறிவியிலின் பங்களிப்பு எவ்வாறு பயன்படுத்தி வருகின்றோம் என்பதனை பரிசோதனைகளுடன் செய்து காட்டினார்.

Advertisement

மேலும், ‘‘அறிவியலின் உருவம்” என்ற தலைப்பில் எழில்வேனில் சிறப்பாக எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டனர். மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் தனலெட்சுமி, நூலகர் ஜெயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் இன்று ‘‘விண்ணியல் அறிவோம்’’ நிகழ்ச்சியினை மனோகர் நடத்த உள்ளார். நாளை (14 ம் தேதி) ”நாட்டுப்புறக்கலைகள்” மற்றும் “மொழிப்பயிற்சி” யினை பன்முகக்கலைஞர் லால்குடி முருகானந்தம் மற்றும் மங்களமேரி வழங்குகிறார். அனைத்து கோடை கால நிகழ்வுகளிலும் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News