தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தற்கொலை செய்தவரின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு: மகன், பேரன் மீது வழக்குப்பதிவு

 

Advertisement

திருமங்கலம், ஜன. 1: திருமங்கலம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட முதியவரின் உடலை, போலீசார், வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்கள் எரித்தனர். இதையடுத்து இறந்தவரின் மகன், பேரன் உள்ளிட்ட உறவினர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். திருமங்கலத்தை அடுத்த சிந்துபட்டி அருகேயுள்ள வி.கள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஒச்சாத்தேவர்(68). இவரது மனைவி பெருமாயி கடந்த ஒரு மாத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

மனைவியின் மீது அதிக பாசம் வைத்திருந்த ஒச்சாத்தேவருக்கு, அவரது பிரிவு மனவிரக்தியை தந்துள்ளதாக தெரிகிறது. மேலும் இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் ஆறாத நிலையில் இருந்து வந்தது. இதன்படி, வேதனையில் இருந்த ஒச்சாத்தேவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் அருந்தி மயங்கினார். இதனை பார்த்த அவரது மகன் துரைபாண்டி, பேரன் மகாபிரபு ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலமாக இவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

இதனை தொடர்ந்து ஒச்சாத்தேவரின் உடலை அவரது மகன், பேரன் மற்றும் உறவினர்கள் பெரியபாண்டி, தங்கம், ராமர் ஆகியோர் போலீசாருக்கோ, வருவாயத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் எரித்தனர். இது குறித்து தகவல் அறிந்த வேப்பனூத்து விஏஓ கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில், சிந்துபட்டி போலீசார் உடலை எரித்த மகன், பேரன் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement