தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுகவனேஸ்வரர் கோயில் தெப்பக்குளம் சீரமைப்பு

சேலம், மே 24: சேலம் சுகவனேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் பல இடங்களில் சுற்றுச்சுவர் சேதமானதால், அவற்றை சீர் செய்வதற்காக தண்ணீரை வெளியேற்றி சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

Advertisement

சேலம் மாநகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் இருந்து நீர் எடுத்து தான் சிவன், சொர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். தெப்பக்குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் வசித்து வருகிறது. கடந்த சில மாதமாக தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து வருகிறது. இதை சரி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோயில் நிர்வாகத்தை வலியுறுத்தினர்.இதையடுத்து தெப்பக்குளம் சீரமைக்கும் பணியில் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக கடந்த இரு நாட்களாக தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சு வெளியேற்றினர்.

சுமார் 15 அடி ஆழத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து தெப்பக்குளம் சுற்றுச்சுவரை சீரமைப்பதற்காக சாரம் கட்டி சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இது குறித்து கோயில் அதிகாரிகள் கூறுகையில், ‘‘தெப்பகுளத்தில் சுற்றுச்சுவர் பல இடங்களில் சரிந்தும், சேதமடைந்து உள்ளது. அவற்றை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றி சுற்றுச்சுவர் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இப்பணி ஒரு மாதத்தில் நிறைவு ெசய்து மீண்டும் புது தண்ணீர் விடப்படும்,’’ என்றனர்.

Advertisement

Related News