தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழனி முருகன் கோயிலுக்கு இன்று சர்க்கரை கொள்முதல்

 

Advertisement

ஊட்டி,ஜூன்1: நீலகிரி மாவட்டம் ஊட்டி - கோத்தகிரி சாலையில் சுமார் 8 கி.மீ., தொலைவில் தொட்டபெட்டா சிகரம் அமைந்துள்ளது.தமிழகத்தின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான தொட்டபெட்டாவை காண சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்வது வழக்கம். இச்சிகரத்திற்கு செல்ல கோத்தகிரி சாலையில் இருந்து 3 கிமீ., தூரத்திற்கு வனத்துறை கட்டுபாட்டில் உள்ள சாலை வழியாக பயணிக்க வேண்டும். நுழைவுவாயில் பகுதியில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்ய பாஸ்ட் டேக் எனப்படும் மின்னணு பரிவர்த்தனை தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது

கடந்த ஓராண்டாக இம்முறை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சீசன் சமயங்களில் நுழைவு கட்டணம் செலுத்தி செல்வதற்காக ஏராளமான வாகனங்கள் அணிவகுக்கின்றன. இதனால் ஊட்டி - கோத்தகிரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதனால் இச்சாலையில் பயணிக்க கூடிய பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கும் பாஸ்ட் டேக் சோதனை சாவடியை வேறு இடத்திற்கு மாற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்து நுழைவு வாயில் பகுதியில் இருந்து சிகரத்திற்கு செல்ல கூடிய சாலையில் சுமார் அரை கிமீ., தொலைவில் பாஸ்ட் டேக் நுழைவு கட்டண வசூல் மையத்தை அமைக்க நடவடிக்கை எடுத்து, கடந்த மாதம் 16ம் தேதி பணிகள் துவங்கின. தொடர்ந்து கடந்த மாதம் கொட்டிய கனமழை உள்ளிட்ட காரணங்களால் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.தற்போது வரை சுமார் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News