தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணாடத்தில் பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

 

Advertisement

விருத்தாசலம், நவ. 17: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் வீரம்மாள் குட்டை என்ற குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் அருகிலுள்ள அனைத்து வார்டு பொதுமக்களும் தாங்கள் வீடுகளில் பயன்படுத்தி வெளியேற்றும் கழிவு நீர் முழுவதும் இந்த குளத்தில் வந்து சேருகிறது.

இதனால் குளம், கழிவு நீர் குட்டையாக மாறி துர்நாற்றம் வீசி வருவதுடன், கொசுக்கள் அதிக அளவில் உருவாகி அருகிலுள்ள பொதுமக்களுக்கு பலவிதமான நோய்கள் வருகிறது. மேலும் கழிவுநீர் குளத்தில் சேராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை கூறி வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக மழை நீரும் குளத்தில் தேங்கி குளம் நிரம்பி வெளியேறும் நிலையில் உள்ளது. இதனால் அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் அங்கு வசிக்க முடியாத சூழ்நிலை உள்ளதால் நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வீரம்மாள் குளத்தை சுற்றியும் பொதுமக்கள் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழை நீர் மற்றும் கழிவுநீர் வெளியே செல்லாமல் குளத்தில் சென்றடைகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளையும் சுற்றி கழிவு நீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி குளத்தில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement

Related News