தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே சாலையில் திடீர் பள்ளம்

துரைப்பாக்கம், மே 25: சென்னை ராஜிவ்காந்தி சாலையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இச்சாலையில் தற்போது, மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே நேற்று மாலை சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். தகவலறிந்த செம்மஞ்சேரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தினேஷ்குமார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து கான்கிரீட் கலவை மற்றும் மண்ணை கொட்டி பள்ளத்தை சரி செய்து, அதன் அருகே இரும்பு தகடுகளை போட்டு சீரமைத்தனர். இச்சம்பவத்தால் சோழிங்நல்லூர் சிக்னலில் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால் இந்த திடீர் பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Related News