தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரும்பாக்கம் சாலையில் திடீர் பள்ளம்: போலீஸ் கமிஷனர் அருண் ஆய்வு

அண்ணாநகர், ஜூன் 4: பூந்தமல்லி நெடுஞ்சாலை அரும்பாக்கம் பிரதான சாலையில் நேற்று காலை திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவ்வழியாக வந்த அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த அண்ணாநகர் மண்டல மாநகராட்சி செயற் பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் வைத்தியலிங்கம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டது தெரியவந்தது. முழுமையான ஆய்வுக்கு பிறகுதான் எப்படி பள்ளம் ஏற்பட்டது என்று தெரியவரும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, அந்த பகுதியில் தடுப்புகள் அமைத்து, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் மண் கொட்டி, உடனடியாக சீரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, அந்த வழியாக காரில் சென்று ெகாண்டிருந்த சென்னை காவல் ஆணையர் அருண் உடனடியாக காரைவிட்டு இறங்கி வந்து பார்வையிட்டு, சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடித்து மக்கள் சிரமமின்றி செல்ல ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Advertisement

Advertisement

Related News