தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இடையார்பாளையம் அருகே தனியார் படகு குழாம் அருகில் திடீர் தீ விபத்து

புதுச்சேரி, ஜூன் 23: இடையார் பாளையம் பாலத்துக்கு அருகே தனியார் படகு குழாமினர் குவித்து வைத்திருந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி- கடலூர் பிரதான சாலையில் இடையார்பாளையத்தில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் பாலம் சேதமடைந்தது. பொதுப்பணித்துறை ரூ.45 லட்சம் மதிப்பில் பாலத்தை சீரமைத்தது. இதற்கிடையே பாலத்தின் அருகே உள்ள தனியார் படகு குழாமின் குப்பை கழிவுகளை பாலத்தின் அருகே கொட்டி வைத்திருந்ததாக தெரிகிறது.

Advertisement

மர்ம நபர்கள் யாரோ சிலர் இந்த குப்பைகளுக்கு தீ வைத்ததால், தீப்பற்றி எரிந்து அருகில் இருந்த மின் வயரிலும் பற்றிக்கொண்டது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். சம்பவ இடத்துக்கு உடனே வந்த மின்துறை அதிகாரிகள், காவலர்கள் தண்ணீர் ஊற்றியும், சிறிய பைப் மூலம் தண்ணீரை பீச்சியடித்தும் முடிந்தவரை தீயை அணைத்தனர். காலதாமதமாக வந்த தீயணைப்புத்துறையினர், தண்ணீர் ஊற்றி தீயை முழுவதுமாக அணைத்தனர்.

தனியார் படகுழு குழாம் நிறுவனத்தின் குப்பைகளை கொட்டி வைத்திருந்ததை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினரா அல்லது மின் கம்பங்களில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News