தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பூட்டிய வீட்டில் திடீர் தீ விபத்து

அரூர், ஜூலை 2: தர்மபுரி மாவட்டம், அரூர் பெரியமண்டி தெருவில் விஜயா என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவர் நேற்று காலை, வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். பிற்பகல் 12 மணி அளவில், திடீரென வீட்டில் ஜன்னல் வழியாக புகை வருவதை, அருகில் வசிப்பவர்கள் பார்த்து, விஜயாவுக்கு செல்போனில் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் வீட்டிற்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது, புகை மூட்டமாக இருந்தது. இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர்(பொ) ஏழுமலை மற்றும் வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீச்சியடித்து தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கருகி நாசமானது. தகவலறிந்து வந்த அரூர் தாசில்தார் பெருமாள் மற்றும் போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.