தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கீழப்புலியூர் வெங்கடேச பெருமாள் கோயிலில் சுதர்சன ஜெயந்தி விழா

 

பெரம்பலூர், ஜூலை 6: பெரம்பலூர் அருகே கீழப்புலியூர் உள்ள திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் சுதர்சன ஜெயந்தி விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மங்கள வாத்தியம் முழங்க அனுக்ஞை, உலக நன்மைக்காக மக்கள் அனைவரும்அமைதியான சூழ்நிலையோடு வாழவும் எல்லோரும் நீண்ட ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யம் தொழில் மேன்மைக்காகவும் மகா சங்கல்பம் நடைபெற்றது. பின்பு யாக குண்டத்தில் பழ வகைகள், வேர் வகைகள் மூலிகைகள் ஆகியவற்றை கொண்டு மகா சுதர்சன மூல மந்திர ஜெப ஹோமங்கள் நடைபெற்றது.

நிறைவாக பூர்ணகுதி உச்சி காலத்தில் நடைபெற்று மகா சுதர்சனருக்கு கும்பங்கள் புறப்பாடாகி கும்ப தீர்த்தங்கள் அபிஷேகம் செய்யப்பட்டது.சுதர்சன மகாயாகத்தை கோவில் ஸ்தானீக பட்டர் கோபாலன் அய்யங்கார், ஜோதிடர் ராம்ஆதித்யா பட்டர், காந்த் பட்டர் ஆகியோர் நடத்தி வைத்தனர். இதில் அறநிலையத்துறை அறங்காவலர் குழு மாவட்ட தலைவர் கலியபெருமாள் மற்றும் கீழப்புலியூர், புதூர், சிறுகுடல் பெரம்பலூர் நகர பக்தர்கள் திரளான பேர் கலந்து கொண்டு சுதர்சனர் மற்றும் பெருமாள் - தாயாரை வழிபட்டனர்.