தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூந்தமல்லி மெட்ரோ பணிமனையில் துணை மின்நிலையம் திறப்பு

பூந்தமல்லி, செப். 1: சென்னை மெட்ரோ ரயில் பூந்தமல்லி பணிமனையில் துணை மின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தின் கீழ், பூந்தமல்லி பணிமனையில் 110/33-27 கி.வோல்ட் துணை மின்நிலையம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையமானது, மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும் முக்கியமான உள்கட்டமைப்பாகும்.

Advertisement

இதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். இது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டத்தின் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது. சென்னைக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை வழங்குவதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. மேலும் நகரத்தில் தடையற்ற மெட்ரோ ரயில் பயண அனுபவத்திற்கு வழி வகுக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Related News