தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமானூர் வட்டார விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் இயந்திர நடவுக்கு மானியம்

ஜெயங்கொண்டம்: இது தொடர்பாக திருமானூர் வட்டார வேளாண்மை துணை இயக்குனர் கலைமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரத்தில் 2025ம் ஆண்டு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் குறுவை நெல் இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது கீழப்பழூரில் உள்ள திருமானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி தங்களது பெயர், கிராமம், நிலத்தின் புலஎண் போன்ற விவரங்களை தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு திருமானூர் வட்டார வேளாண்மை துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

மேலும், இயந்திர நடவு செய்யும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு பாஸ் புத்தக நகல், புவியிட அமைப்பு (geo tagging) குறியீடுடன் கூடிய இயந்திர நடவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என திருமானூர் வட்டார விவசாயிகளை வேளாண்மை துறை அலுவலர்கள் கேட்டுக்கொண்டனர். இத்துடன் குருவை பருவத்திற்கான ‘கோ51’ ரகத்தின் சான்று பெற்ற நெல் விதைகள், நெல் நுண்ச்சத்து மற்றும் உயிர் உரங்கள் திருமானூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடுபொருள்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News