தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குன்னூர் அருகே அடார் எஸ்டேட்டிற்கு மினி பேருந்து செல்லாததால் மாணவர்கள் அவதி

 

குன்னூர், ஜூலை 15: குன்னூர் அருகேயுள்ள அடார் பகுதிக்கு முறையாக மினி பேருந்துகள் செல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து பல்வேறு கிராமப்புற பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் சென்று வருகின்றன. சில கிராமங்களில் குறுகலான சாலைகள் இருப்பதாலும், குறுகிய வளைவுகள் இருப்பதாலும் அரசு பேருந்துகள் செல்ல முடியாத சில இடங்களில் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குன்னூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடார் எஸ்டேட் பகுதிக்கு மினி பேருந்துகள் சென்று வந்தது.

ஆனால், அந்த வழித்தடத்தில் மினி பேருந்தை இயக்குவதற்கு உரிமம் பெற்ற பேருந்துகள் சில நாட்களாக அடார் வரை இயக்கப்படுவதில்லை என்று குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

இதனால், அப்பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் காலை நேரத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து, வண்டிச்சோலை பகுதிக்கு சென்று பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் தங்களது பணிகளை முடித்து மாலை நேரத்தில் வீடு திரும்பும் போது 2 கிலோ மீட்டர் தூரம் வரை வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் முறையான மினி பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News