தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு கலை கல்லூரி வளாகத்தில் கலந்தாய்வு அறிவியல் பாட பிரிவுக்கு மாணவர்கள் பங்கேற்பு

 

Advertisement

கரூர், ஜூன் 15: கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்ற அறிவியல் பாடங்கள் சம்பந்தமான கலந்தாய்வில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2024, 25ம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 30ம்தேதி அன்று சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் (முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு பிரிவு மாணவ, மாணவிகள் மற்றும் அந்தமான் நிகோபார் மாணவர்கள) நடைபெற்றது.

தொடர்ந்து முதற்கட்ட கலந்தாய்வுகள், ஜூன் 10ம்தேதி அன்று இளங்கலை மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், 12ம்தேதி அன்று வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல் மற்றும் வணிக, நிர்வாகவியல், வரலாறு மற்றும் பொருளியல் ஆகிய பிரிவுகளுக்கு கலந்தாய் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நேற்று கல்லூரி வளாக ஆடிட்டோரியத்தில், இளம் அறிவியல் இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், கனிணி அறிவியல், இளம் அறிவியல் விலங்கியல், தாரவியல், புவியியல், புவி அமைப்பியல், ஊட்டசத்து மற்றும் உணவு முறைகள் ஆகிய பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த கலந்தாய்வில் 140 மாணவ, மாணவிகள் தங்களுக்கான பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். தொடர்ந்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஜூன் 24ம்தேதி முதல் 28ம்தேதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News