தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சேரன்மகாதேவியில் லோடு ஆட்டோவில் தொங்கியபடி மாணவர்கள் சாகச பயணம்

வீரவநல்லூர், ஜூலை 23: சேரன்மகாதேவியில் லோடு ஆட்டோவில் தொங்கியபடி மாணவர்கள் சாகசப் பயணம் மேற்கொள்ளும் வீடியோ வாட்சப்பில் வைரலாகி வருகிறது. சேரன்மகாதேவி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஏராளமான கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சேரன்மகாதேவிக்கு பஸ் மற்றும் ரயில்களில் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் கல்லூரி முடிந்து வீடுகளுக்கு செல்லும் மாணவர்கள் ரோட்டில் வருகின்ற வண்டிகளில் லிப்ட் கேட்டு பஸ் நிலையம் மற்றும் ரயில்வே ஸ்டேசனுக்கு செல்கின்றனர்.

அப்போது சில மாணவர்கள் லோடு ஆட்டோ, லாரி போன்ற வாகனங்களிலும் லிப்ட் கேட்டு செல்கின்றனர். இந்நிலையில் சேரன்மகாதேவியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் அருகில் பாடி கட்டிய லோடு ஆட்டோவில் மாணவர்கள் 2 பேர் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மாணவர்கள் 2 பேர் கல்லூரி சீருடையுடன், முதுகில் பேக் சுமந்தபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். ஆட்டோவின் பின்புறம் காரில் வந்த நபர் அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. எனவே காவல்துறையினர் விதிமுறையில் ஈடுபடும் மாணவர்கள் மீதும் அதற்கு வழிவகுக்கும் வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News