தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாள் சண்டையில் மோதும் மாணவர்கள் ஜெயங்கொண்டத்தில் தப்பி ஓடிய கைதியை 15 நிமிடத்தில் பிடித்த போலீசார்

ஜெயங்கொண்டம், டிச.3: ஜெயங்கொண்டத்தில் தப்பி ஓடிய கைதியை போலீசார் 15 நிமிடத்தில் பிடித்தனர். ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்க அழைத்து சென்ற போது தப்பி ஓடிய போக்சோ வழக்கு கைதியை 15 நிமிடத்தில் மடக்கிப்பிடித்து போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இடையக்குறிச்சியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவரது மகன் பாலாஜி (23). இவர், பாலியல் பலாத்கார வழக்கில் போக்சோ சட்டத்தில் ஆண்டிமடம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த 26ம் தேதி ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

இந்நிலையில் நேற்று பாலாஜிக்கு ஆண்மை தன்மை பரிசோதனை செய்வதற்காக சிறைச்சாலையில் இருந்த கைதி பாலாஜியை ஆண்டிமடம் போலீசார் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை முடிந்து மீண்டும் கைதி பாலாஜியை ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் அடைக்க போலீசார் சிறைக்கு உள்ளே அழைத்து சென்றனர். அப்பொழுது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் போலீசாரை தள்ளிவிட்டு கைதி பாலாஜி தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆண்டிமடம் போலீசார் முத்துகிருஷ்ணன் மற்றும் முருகன் ஆகியோர் உடனடியாக பாலாஜியை கைது செய்ய தங்களது தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஜெயங்கொண்டம் வெள்ளாழத் தெருவில் கைதி சென்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஜெயங்கொண்டம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான தலைமை காவலர் முருகன் ராஜேந்திரன் மற்றும் ஆண்டிமடம் போலீசார் உதவியுடன் போக்சோ கைதி பாலாஜியை 15 நிமிடத்தில் மடக்கி பிடித்து மீண்டும் ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News