தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கால்களை தரையில் தேய்த்தபடி பஸ்சில் மாணவர்கள் அட்ராசிட்டி: வீடியோ வைரல்

பூந்தமல்லி, ஜூலை 1: பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து சென்ற மாணவர்கள் அந்த வழியாக தாம்பரம் சென்ற தடம் எண் 66 என்ற மாநகர பேருந்தில் ஏறினர். பேருந்தின் முன்பகுதி படிக்கட்டில் தொங்கியபடியும், கால்களை தரையில் தேய்த்து கொண்டும் வீரசாகசங்கள் செய்தபடி ஆபத்தான முறையில் அட்ராசிட்டி செய்தனர். இதைக் கண்ட பயணிகளும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அந்தப் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் பேருந்தை நிறுத்தி மாணவர்களை கண்டித்து அனுப்பினர். அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் மீண்டும் மாணவர்கள் அதேபோல் தரையில் கால்களை தேய்த்தவாறு சென்றனர். மாணவர்களின் இந்த அட்ராசிட்டியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Related News