விஷம் குடித்து மாணவி பலி
சின்னசேலம், ஜூலை 15: சின்னசேலம் அருகே விஷம் குடித்து மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் அருகே தகரை வடக்கு தெருவை சேர்ந்தவர் காசிவேல் (49). இவர் அதே கிராமத்தில் டேங்க் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவரது மகள் ஹரிணி (19) என்பவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ துணை படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் அவரது பெற்றோர் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். தற்போது படித்து வருவதால் திருமணம் பிடிக்கவில்லை என்று கூறி உள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் ஹரிணி மனமுடைந்து பூச்சி மருந்து குடித்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர், அவரை உடனடியாக சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரிணி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.