தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஒன்றிய அரசை கண்டித்து 9ம் தேதி ஸ்டிரைக்: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் பங்கேற்பு

விழுப்புரம், ஜூலை 4: ஒன்றிய அரசை கண்டித்து 9ம் தேதி நடக்கும் ஸ்டிரைக்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் பங்கேற்கிறது என விழுப்புரத்தில் கு.பாலசுப்பிரமணியன் கூறினார். விழுப்புரத்தில் நேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் சரவணன், மாநில செயலாளர் இளங்கோவன், பொருளாளர் ஜெய்கணேஷ், ஊராட்சி களப்பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் சிவக்குமார், டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறுகையில், ஒன்றிய அரசு, தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளையும், சலுகைகளையும் பறித்துவிட்டு 4 சட்டங்களை புதிதாக உருவாக்கியுள்ளது. இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் 95 சதவீத தொழிலாளர்கள் எந்தவித பலன்களையும் பெற முடியாத நிலைமை ஏற்படும். இதனை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 9ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். இப்போராட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் பங்கேற்க உள்ளோம். 9ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் மற்றும் அதனை சார்ந்துள்ள 10க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள். தலைநகரங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டமும் நடத்த இருக்கிறோம், என்றார்.

Related News