தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தரமற்ற விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை பாயும்

ஓமலூர், ஜூன் 20: சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தற்போது வைகாசி-ஆனி மாத பருவத்திற்கு ஏற்ற நெல் விதைகள், தேவையான அளவு இருப்பு உள்ளது. அதே போல, மக்காச்சோளம், கேழ்வரகு, சோளம், கம்பு, தினை மற்றும் சாமை விதைகளும், துவரை, தட்டை பயறு, பாசிப்பயறு, உளுந்து, மொச்சை, அவரை, பீன்ஸ் போன்ற விதைகளும், எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலை, ஆமணக்கு ஆகிய விதைகளும் விற்பனைக்கு உள்ளது. இதில், வீரிய கலப்பின விதைகள் மற்றும் ரக விதைகள், தற்சமயம் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த விதைகளின் தரம் குறித்து விதை ஆய்வு பிரிவு ஆய்வாளர்களால் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

இதுவரை சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில், 1.088 மெட்ரிக் டன் அளவிலான ரூ.23.765 லட்சம் மதிப்பிலான தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் விதைகளை அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் வாங்கும்போது, கண்டிப்பாக விலைப்பட்டியல் கேட்டு பெற வேண்டும். மேலும், விதைகளின் பயிர் ரகம், விதை குவியல் எண், விதை தரம் மற்றும் விதை காலக்கெடு ஆகியவற்றை சரி பார்த்து வாங்க வேண்டும். இதனால், நல்ல தரமான விதைகளை விதைப்பதோடு, கூடுதல் மகசூல் உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News