தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போரூர் அருகே ஐ.டி நிறுவன வளாகத்தில் தெருநாய் வாய், கால்களை கட்டிப்போட்டு சித்ரவதை: போலீசார் விசாரணை

 

Advertisement

பூந்தமல்லி, பிப்.17: போரூர் அடுத்த ராமாபுரம் பகுதியில் தனியார் ஐ.டி பார்க் செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் தனியார் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் மருந்துகளை தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வளாகத்தில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள், அங்கு வரும் ஊழியர்கள் மற்றும் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டவர்களை துரத்தி துரத்தி கடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெஸ்ட் கன்ட்ரோல் ஊழியர்கள், அந்நிறுவன வளாகத்தில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை மடக்கிப் பிடித்து, அதன் கால்கள் மற்றும் வாயை டேப் மூலம் கட்டிப்போட்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அப்புறப்படுத்தியுள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள், வேளச்சேரியில் செயல்பட்டு வரும் புளு கிராஸ் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த புளு கிராஸ் அமைப்பினர், அங்கு கால்கள் மற்றும் வாய் கட்டிய நிலையில் இருந்த தெரு நாய்களின் கட்டுகளை உடனடியாக அவிழ்த்து அவற்றை விடுவித்தனர். இதுகுறித்து மாங்காடு காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement