தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநில பேரிடர் மீட்பு படையினர் முகாம்

 

Advertisement

கூடலூர், மே 25: பருவ மழையின் தீவிரம் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக கூடலூரில் மாநில பேரிடர் மீட்பு படையினர் முகாம் அமைத்துள்ளனர். கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே சில இடங்களில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடரும் மழை காரணமாக மிகவும் குளிர்ச்சியான காலநிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், மழை வெள்ள பாதிப்புகளின் போது பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக கூடலூருக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னை ஆவடியில் இருந்து கூடலூர் வந்துள்ள 25 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் தேவையான மீட்பு கருவிகளுடன் கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முகாமிட்டுள்ளனர்.

மேலும், மழை வெள்ளத்தால் பாதிப்பு கூடிய தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் காலை முதல் 24 மணி நேரத்தில் கூடலூர் 33, மேல் கூடலூர் 38, தேவாலா 84, செலுமுள்ளி 48, பாடந்துறை 52, ஓவேலி 55 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

Advertisement

Related News