தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் ஜோதி யாத்திரை துவக்கம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில்ராஜிவ்காந்தியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு, ராஜிவ் ஜோதி யாத்திரையை காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு தொடங்கி வைத்தார். ஸ்ரீபெரும்புத்தூரில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவகம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ராஜிவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, அமைதியை முன்னிலைப்படுத்தி ராஜிவ் ஜோதி யாத்திரை கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு, கொண்டு செல்லப்படும் ஜோதி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிறந்த தினத்தன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, வரும் 20ம்தேதி ராஜிவ்காந்தியின் 80ம் ஆண்டு பிறந்தநாள் தினம் கொண்டாடப்படுகிறது.
Advertisement

இதையொட்டி, ராஜிவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரை தொடக்க விழா நேற்று ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு கலந்துகொண்டு, ஸ்ரீபெரும்புதூரில் புறப்பட்ட ராஜிவ் ஜோதி யாத்திரையை தொடங்கி வைத்தார். இந்த, ராஜிவ் ஜோதி கர்நாடக மாநிலம், பெங்களூரு வழியாக 10 நாட்கள் பயணம் சென்று டெல்லியை சென்றடைய உள்ளது. நிகழ்வில் ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ராஜிவ் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisement

Related News