தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூதலூர் தாலுகாவில் குறுவை பயிரில் மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

தஞ்சாவூர், ஜூன் 7:தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகாவில் முன்பட்ட குறுவை பயிரில் பூச்சி தாக்குதல் காரணமாக மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தஞ்சை அருகே பூதலூர் தாலுகா பகுதியில் உள்ள பல கிராமங்களில் ஆழ்துளை கிணற்று நீரை கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடவு செய்யப்பட்ட பயிர்கள் கோடையில் பெய்த மழை காரணமாக செழித்து வளர்ந்து வருகின்றன. பயிர் செய்யப்பட்ட குறுவை நெல் வயல்களில் விவசாயிகள் களை எடுத்து மேல் உரமிடும் பணிகளை செய்து வருகின்றனர்.

Advertisement

ஒருசில வயல்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குருவைப்பயிர்களில் பூச்சி தாக்குதல் தென்பட்டுள்ளதால், விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்தை ஸ்பிரேயர் மூலம் பயிர்களின் மீது தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அக்னிநட்சத்திரம் நிறைவடைந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக பூதலூர் தாலுகா பகுதிகளில் அக்னி நட்சத்திர வெயில் போல அடித்து வருகிறது. இதனால் அதிக நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய சூழ்நிலையில் விவசாயிகள் உள்ளனர். பயிர்களில் பூச்சி தாக்குதல் காரணமாக மகசூல் குறையவும் வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Advertisement