தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வத்தலக்குண்டு பள்ளிகள் முன்பு வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும்: பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் பள்ளிகள் முன்பு அகற்றிய வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் அருகாமையில் உள்ள தனியார் பள்ளியின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகளும், மதுரை சாலையில் சர்ச் அருகேயுள்ள தனியார் பள்ளியின் முன்பிருந்த வேகத்தடைகளையும், கடந்த கோடை விழாவின்போது முக்கிய பிரமுகர்கள் கொடைக்கானல் வந்ததையொட்டி அகற்றப்பட்டது.

Advertisement

இந்நிலையில் கோடை விழாவும், கொடைக்கானல் சீசனும் நிறைவு பெற்று, தற்போது பள்ளிகளும் திறந்து மூன்று வார காலத்திற்கு மேலாகி விட்டன. ஆனால் பள்ளிகள் முன்பு அகற்றப்பட்ட வேகத்தடைகள், மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் அந்தப் பகுதியில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் முன்பு அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ``வேகத்தடைகள் அகற்றப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாகும். இப்பகுதிகளில் ஏற்கனவே பலமுறை விபத்துக்கள் நடந்துள்ளது. எனவே இனியும் காலதாமதம் இன்றி பள்ளிகள் முன்பு வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும்’’ என்றனர்.

Advertisement

Related News