தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் கிளைக்கோமா நோயாளிகளுக்கு நாளை மறுநாள் சிறப்பு மாநாடு

Advertisement

சென்னை: சென்னை டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையில் நாளை மறுநாள் கிளைக்கோமா நோயாளிகளுக்கான சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளின் தலைவர் டாக்டர் அஷ்வின் அகர்வால் அளித்த பேட்டி: கிளைக்கோமா என்பது கண் நோய்களின் ஒரு பிரிவு. இது பார்வை நரம்பு எனப்படும் கண்களின் பின்புறத்தில் உள்ள நரம்பை சேதப்படுத்துவதன் மூலம் பார்வை இழப்பை ஏற்படுத்தும்.

இதன் அறிகுறிகள் மிகவும் மெதுவாகத் தொடங்கும், இதனால் நோயாளிகள் கவனிக்க மாட்டார்கள். ஒரு நபருக்கு கிளைக்கோமா இருக்கிறதா என்பதைக் கண்டறிய விரிவான கண் பரிசோதனை செய்வது தான் ஒரே வழி. டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, நாளை மறுநாள் கிளைக்கோமா நோயாளிகள் மாநாட்டை ஏற்பாடு செய்கிறது. இந்தியாவின் முன்னணி கண் மருத்துவர்கள் மற்றும் கிளைக்கோமா நிபுணர்கள் உரையாற்ற உள்ள இந்த மாநாட்டில், நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான நோயாளிகள் பங்கேற்பார்கள்.

இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்புவதற்கும், தொலைதூரத்தில் இருந்து நோயாளிகள் பங்கேற்கவும் நாடு முழுவதும் உள்ள அமையங்களில் வீடியோ கான்பரன்சிங் வசதிகளை நிறுவுகிறது. இதில் பங்கேற்பதற்கு நோயாளிகள் https://www.dragarwal.com/glaucoma-patient-summit/ என்ற இணையதளத்தை அணுகலாம் அல்லது 9594901868 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் இதில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், கிளைக்கோமா கண் பரிசோதனை இலவசமாக நடத்தப்படும்.

மீளமுடியாத பார்வை இழப்புக்கு மிகவும் பொதுவான காரணம் கிளைக்கோமா. உலக அளவில் 80 மில்லியன் மக்கள் இந்த நிலையில் உள்ளனர். 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் கிளைக்கோமா பாதிப்பு தோராயமாக 3-5 சதவீதம் ஆகும். இந்தியாவில், இது கண்புரை மற்றும் ஒளிவிலகல் பிரச்னைக்குப் பிறகு பார்வை இழப்புக்கு மூன்றாவது முக்கிய காரணம். தற்போது, நாட்டில் 12 மில்லியன் கிளைக்கோமா நோயாளிகள் உள்ளனர். இந்த நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டு பிடித்தால் சிகிச்சை மற்றும் வழக்கமான சோதனைகள் மூலம் பார்வை இழப்பை குறைக்க அல்லது தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement