தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தரிசாக கிடக்கும் ஆற்றுப்பாசன வயல்கள் இன்று காவிரிதாய்க்கு சிறப்புபூஜை திருவையாறு காவிரி ஆற்றில் விவசாயிகள் தூய்மைப்பணி

 

Advertisement

தஞ்சாவூர், ஜூன் 15: திருவையாறு காவிரி ஆற்றில் இன்று காவிரி தாய்க்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதையொட்டி நேற்று காவிரி ஆற்றுப் பகுதியில் விவசாயிகள் தூய்மை பணி மேற்கொண்டனர்.காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணை திறந்து விடப்படவில்லை.

இந்த நிலையில் காவிரி தாய் இயற்கை வழி, வேளாண் உழவர் நடுவம் மற்றும் தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நெற்களஞ்சிய பகுதி அனைத்து உழவர் அமைப்புகள் சார்பில் இன்று ( சனிக்கிழமை) தஞ்சாவூர் அருகே திருவையாறு காவிரி ஆற்றினுள் காவிரித்தாய் உருவப்படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து காவிரிநீர் வர வேண்டி வழிபாடு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திருவையாறு ஆற்று பகுதியை தூய்மை செய்யும்பணி நடைபெற்றது.

ஆற்றில் இருந்த முட்புதர்கள், குப்பைகள் அகற்றப்பட்டன. இந்தப் பணியில் காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் நிறுவனத் தலைவர் அரு சீர். தங்கராசு, அவைத்தலைவர் சுந்தரிஆனந்தன், ஒருங்கிணைப்பாளர் பசுபதி, காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் ரவிச்சந்திரன், தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்க நிறுவன தலைவர் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் பொய்யாமொழி, நகர செயலாளர் ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement