தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை

 

Advertisement

ஊட்டி, ஜூன் 18: ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஊட்டியில் உள்ள பெரிய பள்ளிவாசல் இமாம் சுல்தான் ஆலம் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. தொடர்ந்து, காந்தல் ஜாமியா பள்ளிவாசல், அஹ்லே ஹதீஸ் பள்ளி வாசல், பெடரேசன் பள்ளி வாசல், முஹம்தியா பள்ளி வாசல், கார்டன் பள்ளி வாசல், புளூமவுண்டன் தமுமுக பள்ளிவாசல், தலைகுந்தா பள்ளி வாசல், பிங்கர்போஸ்ட் பள்ளி வாசல், மர்கஸ் பள்ளி வாசல், மேரிஸ் ஹில் பள்ளி வாசல், பாம்பே கேசில்பள்ளி வாசல் மற்றும் சாராள பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.

இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒருவருரை ஒருவர் கட்டித்தழுவி சமாதானம் தெரிவித்துக் கொண்டனர். ஆடுகளை குருபானி செய்து, ஏழை எளிய மக்களுக்கு தானமாக வழங்கினர். மேலும், இனிப்புக்களையும் வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர். இதேபோன்று குன்னூர், கூடலூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில், ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News