தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை
வேதாரண்யம்,பிப்.21: வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூரில் அமைந்துள்ளது மேல மறைகாடர் ஆலயம். இந்த ஆலயத்தில் அமைந்துள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், நெய், தேன் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலபைரவர் சிறப்பு யாகம் மற்றும் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இதேபோல் கத்தரிப்புலத்தில் உள்ள காலபைரவர் ஆலயத்திலும்சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள கலந்து கொண்டு அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டனர்.