தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம்: 22 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

 

அரியலூர், ஜூன் 14: அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெட்ரோல் ஸ்கூட்டர், மாதாந்திர உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா மற்றும் வேலைவாய்ப்பு வேண்டி மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து 67 மனுக்கள் பெறப்பட்டு இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும், இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் 2 மாற்றுதிறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக்கருவிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆக்ஸிலரி ஊன்று கோல், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு எல்போ ஊன்றுகோல், 7 பார்வையற்றோருக்கான ஊன்றுகோல்கள் என மொத்தம் 22 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.93,132 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரத்தினசாமி வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுலவர் மஞ்சுளா, இதர அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து 67 மனுக்கள் பெறப்பட்டு இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

Related News