தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆதார் உள்பட சான்றிதழ் பெற பழங்குடியின மக்களுக்கு 30ம் தேதி சிறப்பு முகாம்

 

கருர், ஜூன் 27: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கான ஆதார் உள்பட சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகிற 30ம் தேதி நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் மேம்பாடு அடைவதற்காக பிஎம் ஜன்மான் மற்றும் டிஏ ஜேஜியூஏ ஆகிய திட்டங்களின் கீழ் பழங்குடியின மக்களுக்கு ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ்,

சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்காக ஜூன் 30ம் தேதி கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் தாசில்தார் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் இ சேவை, ஆதார் மையங்கள் வாயிலாக சிறப்பு முகாம்கள் நடைபெறுவதால் அந்த முகாமினை கரூர் மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.