தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெற்கு கல்லிடைக்குறிச்சியில் உழவரை தேடி வேளாண்மை சிறப்பு முகாம்

 

Advertisement

வீரவநல்லூர், மே 31: தெற்கு கல்லிடைக்குறிச்சியில் உழவரைத் தேடி வேளாண்மை சிறப்பு முகாம் நடந்தது. சேரன்மகாதேவி வட்டார வேளாண்மைத்துறை சார்பில் தெற்கு கல்லிடைகுறிச்சியில் உழவரை தேடி வேளாண்மை என்ற தலைப்பில் உழவர் நலத்துறை சிறப்பு முகாம் நடந்தது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) மணி வரவேற்றார். யூனியன் சேர்மன் பூங்கோதை குமார் தலைமை வகித்து விவசாயிகளுக்கு இடுபொருட்கள், தொழில்நுட்ப துண்டு பிரசுரம் வழங்கினார்.

பொட்டல் ஊராட்சி துணைத்தலைவர் அரிராம்சேட் முன்னிலை வகித்தார். நெல்லை உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் சுபசெல்வி \”உழவரைத் தேடி வேளாண்மை\” எனும் உழவர் நலத்துறை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் ரஜினிமாலா நெல் பயிரை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து பேசினார்.

வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் வேளாண்மை அலுவலர் ஆனந்த்குமார், கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை உதவி மருத்துவர் முயல்வி, பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் பிரேமா, தோட்டக்கலைத்துறையின் உதவி தோட்டக்கலை அலுவலர் இசக்கியம்மாள், நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சரக மேற்பார்வையாளர் திருமால் ஆகியோர் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

முகாமில் செம்மறி, வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்கம், நெற்பயிரில் உயிர் உர விதை நேர்த்தி செய்வது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் வேளாண்மைத்துறை சார்பில் கருத்துக் காட்சி அமைக்கப்பட்டு விவசாயிகள் பார்வையிட்டனர். துணை வேளாண்மை அலுவலர் வரதராஜன் நன்றி கூறினார்.

Advertisement

Related News