தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமனாரை கத்தியால் வெட்டிய மருமகன் கைது

வேலூர், மே 19: காட்பாடி அருகே துணி துவைத்த தகராறில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாமனாரை கத்தியால் வெட்டிய மருமகன் கைது செய்யப்பட்டார்.காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜி(48). இவரது மகள் அர்ச்சனா(26). அர்ச்சனாவின் கணவர் ராஜ்குமார் (38). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். மேல்தள வீட்டில் அர்ச்சனா, தனது கணவருடன் உள்ளார். அர்ச்சனாவின் தாய் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனல் அதேபகுதியை சேர்ந்த கணவரை இழந்த பெண்ணை ராஜி, 2வது திருமணம் செய்துள்ளார். இதனை அர்ச்சனா ஏற்காமல் தொடர்ந்து தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்த வீட்டை தனது பெயருக்கு எழுதித்தரும்படி கேட்டு வந்தாராம்.

Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் அர்ச்சனா கீழ்தளத்தில் துணிகளை துவைத்துள்ளார். அப்போது அங்கு வந்த ராஜி, கால் தவறி விழுந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மகளிடம் மேல்தளத்தில் துணி துவைக்க வேண்டியதுதானே? என கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அர்ச்சனா தனது தந்தையை கட்டையால் தாக்கினாராம். மேலும் ராஜ்குமாரும், மாமனார் ராஜியை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ராஜியை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காட்பாடி போலீசில் ராஜி அளித்த புகாரின்பேரில் எஸ்ஐ மணிகண்டன் வழக்குப்பதிந்து ராஜ்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அர்ச்சனாவிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News