தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோண்டி காலனி பகுதியில் சமூக விழிப்புணர்வு முகாம்

 

கோவை, ஜூலை 11: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 97-வது வார்டுக்கு உட்பட்ட சுந்தராபுரம் கோண்டி காலனி பகுதியில் கோவை மாநகராட்சி மற்றும் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் சமூக விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

இதை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் துவக்கிவைத்தார். பின்னர், அவர் கூறியதாவது:

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, தெற்கு மண்டலம் சுந்தராபுரம் 97வது வார்டுக்கு உட்பட்ட கோண்டி காலனி பகுதியில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மலை கிராம மக்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கோவை மாநகராட்சி மற்றும் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் இப்பகுதி மக்கள் சமூக ரீதியில் மேம்பாடு அடையும் வகையில், சமூக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமினை இப்பகுதி மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

Related News