தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சிய சமூக ஆர்வலர்கள்

 

Advertisement

பல்லடம், ஏப்.24: பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்லடம் - தாராபுரம் சாலையில் காய்ந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சினர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் - தாராபுரம் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. சாலை விரிவாக்கத்தின் போது சாலையின் 2 புறங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிலையில் கடும் கோடை வெயிலால் அவை காய்ந்து கருகி போகும் நிலை வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் தனியார் தண்ணீர் வேன்கள் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சினர். இதற்கிடையே பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்லடம் - தாராபுரம் சாலையில் காய்ந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சினர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை கூறியதாவது: பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போது வைக்கப்பட்ட மரக்கன்றுகளில் பெரும்பாலானவை தண்ணீர் இன்றி காய்ந்து கருகி வருகின்றன.

இதனால், மரக்கன்றுகள் வைத்ததற்கான செலவு மற்றும் மனித உழைப்பு ஆகியவை வீணாகி வருகிறது. இதுகுறித்து அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் தண்ணீர் விலைக்கு வாங்கி காய்ந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சினோம். ஏற்கனவே பல்லடம் பகுதியில், வெட்டப்பட்டு வருகின்றன.

புதிதாக வைக்கப்படும் மரக்கன்றுகளையும் இவ்வாறு அலட்சியம் காட்டுவதால், பல்லடம் பகுதி பாலைவனமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. எனவே, காய்ந்த கருகிய மரக்கன்றுகளுக்கு இணையாக, புதிய மரக்கன்றுகளை நடவு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மரம் வெட்டினால் அதற்கு இணையாக 4 மரங்களை நடவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் யாரும் இதை பின்பற்றுவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement