தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லியாளம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு திறன் போட்டி

 

Advertisement

பந்தலூர், அக்.2 : நெல்லியாளம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்களுக்கு திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சியில் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 ம் தேதி வரை நகரங்களின் தூய்மை மக்கள் இயக்கம் , தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை பணிகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் முனியப்பன் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் அறிவழகன் வரவேற்று பேசினார். நகர்மன்ற கவுன்சிலர் ஜாபீர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் நவமணி, நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்பிரமணியம், சமூக பணியாளர்கள் அஜீத், ரவீந்திரன், சுரேஷ் மற்றும் நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement