தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செய்யது அம்மாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

ராமநாதபுரம், ஆக.22: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்த மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் ஆங்கிலத்துறை பேராசிரியை முனைவர் ஆர்.கவிதா வரவேற்று பேசினார். கல்லுாரி முதல்வர் முனைவர் பெரியசாமி முன்னிலை வகித்தார். கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்து பேசுகையில்: அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு கல்லுாரியில் உள்ள சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார். மேலும் கல்லூரியில் பணிபுரிந்து வரும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரையும் மாணவ,மாணவிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். எங்களது கல்லூரியில் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி, அனுபவமிக்க பேராசிரியர்கள், நல்ல காற்றோட்டமான வகுப்பறைகள் மற்றும் உயர்தரமிக்க ஆய்வகங்கள் மற்றும் நுாலகங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அதனை நீங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் சிறந்த புலமையை பெற முடியும் என்றும் எடுத்துரைத்தார். விழாவின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெயலெட்சுமி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.

Advertisement

Advertisement