தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகங்கையில் அதிகபட்சமாக 90.4 மி.மீ மழைப்பதிவு

 

Advertisement

சிவகங்கை, நவ. 25: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக காலம் தவறிய பருவ மழை, போதிய மழை இல்லாமை உள்ளிட்டவைகளால் கண்மாய், குளங்களில் நீர் தேங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழையால் கிடைக்கும் நீர் அடுத்த ஆண்டு கோடைகாலம் வரை நீர் நிலைகளில் இருக்க வேண்டும். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக அதுபோல் இல்லாமல் கோடைக்கு முன்பே நீர் இல்லாமல் குளங்கள், கண்மாய்கள் வறண்டு காணப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பரு மழை பெய்தது. அதன் பிறகு மழை இல்லை. கடந்த பிப்ரவரி மாதம் சில நாட்கள் லேசான மழை பெய்தது.

இது போல் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை அவ்வப்போது சில நாள்கள் மழை பெய்தது. தற்போது கண்மாய்களில் நீர் இல்லாத நிலையில் விவசாயம் முழுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்தது. நேற்று முன்தினம் மாலை மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றும் பகலிலும் சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதையடுத்து நேற்று மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார். கடந்த இரண்டு நாட்களில் அதிகபட்சமாக சிவகங்கையில் 90.4 மி.மீ மழை பெய்தது.

தேவகோட்டையில் 73மி.மீ, திருப்புவனம் 68.4மி.மீ, காளையார்கோவிலில் 67.4மி.மீ, காரைக்குடியில் 65மி.மீ, சிங்கம்புணரியில் 46.4மி.மீ, மானாமதுரையில் 44.2மி.மீ, திருப்பத்தூரில் 44மி.மீ, இளையான்குடியில் 27மி.மீ, மழை பெய்தது. பகல் நேரங்களில் பெய்யும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

 

Advertisement

Related News