தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கமுதி அருகே உறவினர் வீட்டில் நகை திருடிய பெண் கைது

கமுதி, ஆக.18: கமுதி அருகே உறவினர் வீட்டில் 14.75 பவுன் நகை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கமுதி அருகே அபிராமம், பள்ளபச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி முனீஸ்வரி (38). இவர் கோனேரியேந்தல் கிராமத்தில் வசிக்கும் தனது இரண்டாவது தம்பி முனியசாமி வீட்டில் 14.75 பவுன் தங்க நகையை கொடுத்து வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி இந்த நகை திருடு போனது. இதுகுறித்து அபிராமம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில், முனீஸ்வரியின் கடைசி தம்பி முருகானந்தம் மனைவி வித்யா (25) நகையை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, எஸ்ஐ ராஜ்குமார் தலைமையிலான போலீசார் வித்யாவை பிடித்து விசாரித்த போது, நகைகளை திருடி ராமநாதபுரத்திலுள்ள அடகு கடையில் விற்று, அதே கடையில் புதிதாக நகை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, வித்யாவை போலீசார் நேற்று கைது செய்து அவரிடமிருந்து 8 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.