தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சங்கராபுரம் பகுதியில் நோய் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை: ஊராட்சி தலைவர் தகவல்

காரைக்குடி, டிச.13: காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைகால நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டது. பணிகளை ஊராட்சி தலைவர் பிரியதர்ஷினி அய்யப்பன் துவக்கிவைத்து பேசுகையில், சங்கராபுரம் பகுதியில் கொசுக்களின் மூலம் எந்தவிதமான தொற்று நோய்களும் மக்களுக்கு பராமல் தடுப்பதற்கான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் களஆய்வு மேற்கொண்டு தேவையான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மழை காலங்களில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு உள்பட பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் விதமாக அனைத்து பகுதிகளிலும் கொசு புகை மருந்து அடிக்கப்பட உள்ளது. தவிர களபணியாளர்களை கொண்டு ஒவ்வொரு வீடாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

பொதுமக்களும் உரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தங்கள் குடியிருப்பு பகுதிகளில் தேவையற்ற குப்பைகள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் உள்ள டிரம் உள்பட அனைத்தையும் மூடி வைக்க வேண்டும். குளிர்சாதன பெட்டியில் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டயர் உள்பட தேவையற்ற பொருட்கள் வீடுகளில் சேர்த்து வைக்க வேண்டாம். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தோங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவிர சாலையோரங்களில் இருந்து புதர்மண்டி கிடந்த செடிகள் அகற்றப்பட்டுள்ளன. மழைகால தொற்றுநோய்களில் மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் குளேரினேசன் செய்யப்பட்டு வருகிறது என்றார். கிட் அண்டு கிம் பொறியியல் கல்லூரி தலைவர் வி.அய்யப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement

Related News