தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொழிற்கூடங்களுக்கு விரைந்து உரிமம் மாவட்ட தொழில் மையம் தகவல்

சிவகங்கை, அக்.4: தொழிற்கூடங்கள் நிறுவ தொழில் முனைவோர்களுக்கு தேவையான உதவிகள் விரைந்து செயல்படுத்தப்படுவதாக மாவட்ட தொழில் மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், மேம்பாடு அடைய செய்யவும் தற்போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கொள்கைகள் எளிமையாக்கப்பட்டு தொழிற்கூடங்கள் நிறுவுவதில் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளை களைய தீர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இக்குழு வாயிலாக ஒற்றை சாளர முறையில் தொழிற்கூடங்கள் நிறுவுவதற்கு தேவையான அனைத்து வகையான உரிமங்கள், மின் இணைப்புகள், ஒப்புதல்கள், தடையின்மை சான்றிதழ்கள் ஆகியவற்றை அரசுத்துறைகள், நிறுவனங்களிடமிருந்து உடனுக்குடன் பெற்றுக் கொள்ள, உரிய ஆவண விபரங்களுடன் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்தால் உரிய காலவரையறைக்குள் குழு தேவையான ஆணைகளை பிறப்பிக்கும். எனவே தொடர்புடைய அரசுத்துறைகள், அரசு நிறுவனங்கள், அமைப்புகள் இதில் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது இன்றியமையாததாக அமைந்துள்ளது. மேலும் தேவையற்ற கால இடைவெளி முற்றிலுமாக தவிர்க்கப்படும். இந்த நடைமுறையை சிவகங்கை மாவட்டத்திலுள்ள தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தேவையான அனைத்து உரிமங்கள், ஒப்புதல்களை உரிய காலத்தில் பெற்று பயனடையலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement