இடையமேலூரில் நாளை மின்தடை
சிவகங்கை, நவ. 26: இடையமேலூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டி, மலம்பட்டி, சாலூர், பாப்பாகுடி, இடையமேலூர், கூட்டுறவுபட்டி, மேலப்பூங்குடி, தேவன் கோட்டை, வில்லிப்பட்டி, ஒக்கப்பட்டி, புதுப்பட்டி, சக்கந்தி உள்ளிட்ட இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement