தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்புவனம் பகுதியில் எண்ணெய் பனை கன்றுகள் 100% மானியத்தில் பெறலாம்: உதவி இயக்குனர் தகவல்

திருப்புவனம், டிச.11: திருப்புவனம் பகுதியில் எண்ணெய் பனை கன்றுகள் நடவு செய்ய 100 சதவீதம் மானியம் வழங்கப்படும் என திருப்புவனம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து திருப்புவனம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சர்மிளா தெரிவித்ததாவது:

தேசிய எண்ணெய் பனை இயக்க திட்டத்தின் கீழ் எண்ணெய் பனை திருப்புவனம் ஒன்றியத்தில் 21 எக்டேர் வரை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 1 எக்டேருக்கு ரூ.29 ஆயிரம் மதிப்புள்ள எண்ணெய் பனைகன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். ஒரு எக்டேர் நிலத்தில் 9க்கு 9 மீட்டர் இடைவெளியில் 143 பனை கன்றுகளை நடவு செய்யலாம்.

இந்த பனை சாகுபடியில் முதல் 4 ஆண்டிற்கு ரூ.5 ஆயிரத்து 250ம் மற்றும் ஊடுபயிர் சாகுபடி செய்வதற்கு ரூ.5 ஆயிரத்து 250ம் என ஒட்டு மொத்தமாக ரூ.10,500 வரை வழங்கப்படும். பயிரிட்ட நான்கு ஆண்டுக்கு பின் பாமாயில் மரத்திற்கு எக்டேருக்கு 5 டன் மகசூல் கிடைக்கும். தொடர்ந்து 30 ஆண்டில் 30 டன்கள் வரை மகசூல் பெறலாம். கூடுதல் மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் திருப்புவனம் வட்டார விவசாயிகள், தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News