தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி

 

Advertisement

உடுமலை, ஜூலை 6: மகாத்மா காந்தி உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சிலம்ப பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டன.கடந்த 7 ஆண்டுக்கு மேலாக பகத்சிங் சிலம்பம் களரி மார்சியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் இலவசமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெற்ற மாணவர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் பங்கு பெற்றனர்.

நடப்பு கல்வி ஆண்டில் 8ம் ஆண்டாக மாணவர்களுக்கு மகாத்மா காந்தி உண்டு பள்ளியில் வளாகத்தில் பயிற்சிகள் துவக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் பயிற்சியை உடுமலை நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் துவக்கி வைத்தார்.மகாத்மா காந்தி உண்டு உறைவிட பள்ளி காப்பாளர் புருஷோத்தமன், சமூக ஆர்வலர் சாஸ்தா ரமேஷ், பணி நிறைவு நூலகர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் செயலாளரும் சிலம்ப ஆசானுமான வீரமணி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். சிலம்ப பயிற்சியாளர் சதீஷ் வாரந்தோறும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளார்.

Advertisement

Related News