தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செய்யூர்-சோத்துப்பாக்கம் இடையே புழுதி பறக்கும் 4 வழி சாலை: வாகன ஓட்டிகள் அவதி

Advertisement

செய்யூர்: செய்யூர்-சோத்துப்பாக்கம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட 4 வழி சாலை புழுதி பறக்கும் சாலையாக மாறியுள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வரை ரூ.603 கோடி மதிப்பீட்டில் 109 கிலோ மீட்டரில் 4 வழி இணைப்பு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சோத்துப்பாக்கம் வரை செல்லும் சாலை பணி நிறைவடைந்துள்ளது. இதில், ஏராளமான வாகனங்கள் அந்த சாலை வழியாக சென்று வருகின்றன. மேலும், செய்யூர்- சோத்துப்பாக்கம் இடையே இயங்கி வரும் கல்குவாரிகளுக்கு செல்ல ஆயிரக்கணக்கான டிப்பர் லாரிகள் இந்த சாலையில் சென்று வருகின்றன.

இந்நிலையில், மழைக்காலங்களில் டிப்பர் லாரிகள் குவாரிகளுக்குள் சென்று வரும்போது புதிதாக போடப்பட்ட இந்த சாலை முழுவதும் சேறும் சகதியுமாகிவிடுகிறது. மேலும், இச்சாலையில் படிந்துள்ள சேறும், சகதியும் காய்ந்தபின் அவை புழுதியாக கிளம்புகிறது. இதனால், இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்படுவதோடு, அவ்வப்போது விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே, விபத்துகளை தடுக்கும் வகையில் இப்பிரச்னைக்கு தீர்வு காண நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News