செய்யூர்-சோத்துப்பாக்கம் இடையே புழுதி பறக்கும் 4 வழி சாலை: வாகன ஓட்டிகள் அவதி
Advertisement
இந்நிலையில், மழைக்காலங்களில் டிப்பர் லாரிகள் குவாரிகளுக்குள் சென்று வரும்போது புதிதாக போடப்பட்ட இந்த சாலை முழுவதும் சேறும் சகதியுமாகிவிடுகிறது. மேலும், இச்சாலையில் படிந்துள்ள சேறும், சகதியும் காய்ந்தபின் அவை புழுதியாக கிளம்புகிறது. இதனால், இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்படுவதோடு, அவ்வப்போது விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே, விபத்துகளை தடுக்கும் வகையில் இப்பிரச்னைக்கு தீர்வு காண நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement